Novena Prayers

  • Home
  • Novena Prayers
Novena Prayers

Novena - Divine Mercy

இறை இரக்கத்தின் நவநாள்

தொடக்க ஜெபம்:

இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இயேசு கற்பித்த செபம்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது என போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! / எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை செபம்:

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. / தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
விசுவாச அறிக்கை :

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு,இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென்.
பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சிறிய மணிகளில்(10):

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக...எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே
( 10 முறை)
(2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))
4. முடிவில்:

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! - எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! - எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! - எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்
இறுதி செபம்:

இரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்.எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்குஉதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும்.அனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது மகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும்உள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும். ஆமென்.
இறை இரக்கத்தின் நவநாள்:

முதல் நாள்:

"இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்".மனுக்குலம் முழுவதும் விஷுசமாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக. இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்.
இரண்டாம் நாள்:

"இன்று குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது."இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும் குருக்கள், துறவியர் அனைவருக்காவும் செபிப்போமாக. இறக்கம் மிகுந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது திராட்சைத் தோட்டததிற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருக்குமாரனின் விஷுச அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் அளித்தருளும். - ஆமென்
மூன்றாம் நாள் :

"இன்று பக்தி பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்க சமுத்திரத்தில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்". பிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக. இரக்கம் மிகுந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாக பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும். ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர் புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக. -ஆமென்.
நான்காம் நாள் :

"இன்று என்னை விசுவசியாதவர்களையும் இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக்கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு." இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காக ஜெபிப்போம். இரக்கம் மிகுந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்கள் இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து நித்தியத்திற்கும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும் இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும். -ஆமென்.
ஐந்தாம் நாள் :

"இன்று பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்." விசுவாசத்தில் தவறுவோருக்காக செபிப்போமாக. இரக்கம் மிகுந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத் தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து நித்தியத்திற்கும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்.... நித்திய பிதாவே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும்.அவர்களது குறைகளைப் பாராமல்அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாகஎன்று தமது மரணத்திற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருக்குமாரனின் அன்பையும்,அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து நித்திய காலத்திற்கும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. -ஆமென் ஆறாம் நாள் :

"இன்று சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை.இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். இவர்கள் எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்." சிறு குழந்தைகளுக்காகவும் அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் ஜெபிப்போமாக. இரக்கம் நிறைந்த இயேசுவே "நான் சாந்தமும் இதய தாழ்ச்சியும் உள்ளவன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர்.சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும். இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி உமது பரலோக தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்கள். உமது திரு இருதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! சாந்தமும் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களில் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் இட்டு, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்
ஏழாம் நாள் :

"இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இதய இரக்கத்தில் மூழ்கச்செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வருந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எமது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலக்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். மரணவேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்". இறை இரக்கத்தில் பக்தி கொண்டு அதனை பரப்புவதன் மூலம் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காகச் செபிப்போமாக. அன்பையே இதயமாகக் கொண்ட இரக்கம் மிகுந்த இயேசுவே இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்துள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது சக்தியை பெறுகின்றனர். துன்பதுரிதங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்ட பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகிய புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும்.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உமது ஆழங்காணமுடியாத இரக்கத்தை உருக்கமாக போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும் செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வான்மாக்கள் நற்செய்தியன் படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் உம்மீதும் உமது வாக்குறுதிகளிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தை காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மகிமையயைப் போன்று இவர்களது வாழ்விலும் விஷுசமாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும். -ஆமென்.
எட்டாம் நாள்:

"இன்று உத்தரிப்பு ஸ்தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். " இறைநீதிப்படி உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிப்போமாக. இரக்கமுள்ள இயேசுவின் திருஇரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக. இரக்கம் நிறைந்த இயேசுவே! என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திஇருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும் அவரது திருஇருதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தை காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம். -ஆமென்
ஒன்பதாம் நாள்:

"இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்துவந்து எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பயங்கர வேதனைகள் அனுபவித்தேன். பிதாவே உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை." ஒலிவத் தோப்பில் கிறிஸ்து நாதருக்குப் பயங்கர வேதனை ஏற்படக் காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காக செபிப்போமாக. இரக்கம் மிகுந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அக்கினிச்சுவாலையில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக.

விண்ணுலகில்... அருள் நிறைந்த... தந்தைக்கும்....

நித்திய பிதாவே! வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும் எமதாண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும் சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மகிமையின் மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக. -ஆமென்.
இறை இரக்கத்தின் மன்றாட்டு மாலை:

சுவாமி கிருபையாயிரும் - சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் - கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் - சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
- கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அதி பரிசுத்த திரித்துவமாயிரக்கிற ஏக சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பரலோக ஆரூபிகளைப் படைக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
– உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரகதியத்தை எங்களுக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகலருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக்காரணமான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்சச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சத்திய திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தை தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அவிவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
இரக்கத்தின் தாயாகிய புனித மரியாளை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மரிப்போரின் அடையாளமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே
- உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் பேரில் தயவாயிரும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும்
முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள் அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
துணை: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.
ஜெபிப்போமாக: மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தை குறித்து எங்கள் பேரின் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக்க உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்