இறைமக்கள் பகுதி
தொடக்கச் சடங்குகள்:
அருட் பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக
(அல்லது)
அ.ப.: நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உங்களோடு இருப்பதாக.
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக
(அல்லது)
அ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
(அல்லது)
அ.ப.: அமைதி உங்களோடு இருப்பதாக
எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாதாக
பாவத்துயர்ச் செயல்
அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
(சிறிது நேரம் அமைதி)
எல்.: எல்லா வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
(மார்பில் தட்டிக் கொண்டு)
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
அ.ப.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப.: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்.: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அ.ப.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அல்லது
அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
(சிறிது நேரம் அமைதி)
அ.ப.: ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
எல்.: ஏனெனில், உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ.ப.: ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
எல்.: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்.: ஆமென்
அல்லது
அ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
(சிறிது நேரம் அமைதி)
அ.ப.: உள்ளம் நொறுங்கி வருந்துவோரை நமலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப.: பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்.: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அ.ப.: தந்தையின் வலப்பக்கம் வீட்றிருந்து, எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்.: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்.: ஆமென்
உன்னதங்களிலே (பாடல்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
as Sung by St. Mary’s College Orchestra (Tuticorin)
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக
உம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்,
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே
இயேசு கிறிஸ்துவே
ஆண்டவராகிய இறைவா,
இறைவனின் செம்மறியே
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்
இருப்பவர் நீரே – ஆமென்.
திருக்குழும மன்றாட்டு
மன்றாடுவோமாக
ஆண்டவரே, உம்முடைய மக்களின் தாழ்மையான
வேண்டல்களுக்கு பேரிக்கத்துடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகிறோம்.
அதனால் தாங்கள் செய்ய வேண்டியதை அறியவும், அறிந்ததை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஆற்றல் அருள்வீராக.
(1) உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். (அல்லது)
(2) உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். (அல்லது)
(3) தந்தையாகிய இறைவனோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.
எல்.: ஆமென்.